பேஸ்புக் மூலம் ஆபாசமாக பேசுவது தான் இவருக்கு தொழிலே..! அதிர்ச்சி கொடுத்த பெண்..!


தேனியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வேலைக்கு செல்லும் பழக்கம் இல்லை. எப்போதும் பேஸ்புக் மூலம் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, ஏதேனும் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து இரவில் ஆபாசமாக பேச்சு கொடுப்பது என இதனை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்.

இந்நிலையில் ராஜாவிற்கு திண்டுக்கலை சேர்ந்த ஒரு பெண் அறிமுகம் ஆகியுள்ளார். அவரிடமும் தொடர்ந்து ஆபாச வார்த்தைகள் பேசுவது, புகைப்படங்கள் அனுப்பவது என இருந்துள்ளார். இதனை அந்த பெண் தேனியை சேர்ந்த தன்னுடைய தோழியான தமிழரசி என்ற பெண்ணிடம் கூறி மன வேதனை அடைந்துள்ளார்.

தனது தோழிக்கு ஆறுதல் கூறிய தமிழரசி அந்த இளைஞரின் பேஸ்புக் முகவரியை வாங்கி கொண்டு அவரிடம் பேசியுள்ளார். தனது வலையில் ஒரு பெண் விழுந்து விட்டதாக எண்ணிய ராஜா தமிழரசியிடம் பேசியுள்ளார். ராஜாவின் வீட்டு முகவரியை வாங்கவே திட்டம் தீட்டிய தமிழரசி ராஜாவை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ராஜாவும் ஒரு வேகத்தில் பைக்கை எடுத்து கொண்டு ரோமியோ போல சென்றுள்ளார்.

நடுரோட்டில் ராஜாவை சந்தித்த தமிழரசி ரோடு என்றும் பார்க்காமல் அடித்து துவைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் நடந்ததை விசாரிக்க அவர்களும் சேர்ந்து ராஜாவை அடித்துள்ளனர். மேலும் தமிழரசி அவரது செல்போன் மற்றும் பைக் சாவியை பறித்து கொண்டு மிரட்டியுள்ளார். ராஜா அவரிடம் கெஞ்சி கேட்டும் விடாத தமிழரசி காவல்நிலையம் அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார்.

ராஜாவை கண்டித்து விசாரணை நடத்திய போலீசார் இனி இது போன்ற புகார்கள் வந்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என கூறி எச்சரித்துள்ளனர். தமிழரசி ராஜாவை போட்டு வெளுத்து வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!