குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா?


குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா? என்பதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.

சிலருக்கு உடல் சூடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் உட்கார்ந்து எழுந்து இடத்தில் சூடாக இருப்பதாக மற்றவர்கள் உணருவார்கள்.

அப்படிப்பட்ட உடல் கொண்டவர்கள், குளிர்ச்சியான காற்று, மழை, பனி விழும் சமயத்தில் வீட்டுக்கு வெளியே இருந்தால் மூக்கடைப்பு, தும்மல், நீர்கோத்து தலைவலி போன்றவை வரும். இவற்றைப் பீனிச பாதிப்பு என்பர். முன்னால் குனிந்தால் நீர் ஓடுவதுபோல் பாரம் இருந்தால், சைனஸிட்டிஸ் இருக்கக்கூடும்.

காது சீழ், டான்சிலிடிஸ் போன்ற எல்லாமே உடலின் மேல் பக்க உறுப்புகளைச் சார்ந்த சுவாச பிரச்சனைகள் எனப்படுகின்றன. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், தலைக்குக் குளிக்கலாமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. பலர் பயத்தில் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதேயில்லை. கண்டிப்பாகத் தினமும் தலைக்குக் குளிக்கவேண்டும்.

உடம்பு வலி இருக்கிறது; காய்ச்சல் இருக்கிறது என்றால் மட்டும் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்கலாம். பல ஆண்டுகள் தலைக்குக் குளித்து பழக்கமில்லையென்றால் உடனடியாக குளிக்கவேண்டாம். சுக்குத்தைலம், நொச்சி தைலம், அரக்கு தைலம் போன்ற சித்த மருத்துவம் சார்ந்த தைலங்களைத் தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!