தம்பி மனைவியை குத்திக் கொன்ற அண்ணன்..! அதிர வைத்த காரணம்..!


திருவாரூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜகோபால். இவரது தம்பி சுந்தரமூர்த்தி, பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சொர்ண பிரியாவும் அவருடன் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் பெங்களூரில் வசித்து வந்த நிலையில், ஊரடங்கால் திருவாரூருக்கு வந்து அங்கேயே தங்கி வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்துள்ளனர்.

பெங்களூர் செல்வதற்கு முன் அண்ணனுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சுந்தரமூர்த்தி, பள்ளிக்கூடம் துவங்குவதற்காக ராஜகோபாலுக்கு ரூபாய். 15 லட்சம் கடனாக கொடுத்திருக்கிறார். அந்த பள்ளி நிர்வாகம் முழுவதுமாக தற்போது ராஜகோபால் வசம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், தாங்கள் கொடுத்த 15 லட்சம் பணத்திற்கு பதிலாக பள்ளி நிர்வாகத்தில் பங்கு வேண்டும் என சுந்தர மூர்த்தியின் மனைவி சொர்ணப் பிரியா ராஜகோபாலிடம் கூறியிருக்கிறார். இதில் அண்ணன் தம்பிக்கு இடையே பிரச்சினை எழுந்துள்ளது.

ஆத்திரமடைந்த ராஜகோபால் தம்பி மனைவியான சொர்ண பிரியாவை கழுத்தில் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ராஜகோபால் தாமாக முன்வந்து அப்பகுதி போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், குடும்ப பிரச்சனை வர காரணமாக இருந்ததால் சொர்ணபிரியாவை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ராஜகோபாலிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!