சித்ராவை இப்படி மோசமாக திட்டிய ஹேம்நாத் – காவல்துறை அதிர்ச்சி தகவல்!


நடிகை சித்ராவுடன் அவரது கணவர் ஹேம்நாத் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்க தகவல்கள் வெளிவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், சித்ரா நாடகங்களில் ஆண்களுன் நெருக்கமாக நடிக்கிறார், நடனமாடுகிறார் என்று ஹேம்நாத் திருமணமானது முதல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த 9ஆம் தேதி சித்ரா படப்பிடிப்பு முடிந்து வந்ததும், யாருடன் நடனமாடினாய் என்று ஹேம்நாத் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஹேம்நாத் சித்ராவிடம் நீ செத்து போ என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டார் என்றும் அதனால் மன உளைச்சல் அடைந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!