ஐபோனை பயன்படுத்திய இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்..!


ரஷியாவில் குளிக்கும்போது ஐபோனை பயன்படுத்திய இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ரஷியாவை சேர்ந்த இளம் பெண் ஒலேஸ்யா செமனோவா (24) குளியல் தொட்டியில் பேச்சு மூச்சின்றி கிடந்ததைக் கண்ட அவரது அறைத்தோழியான டாரியா, அவரை தட்டி எழுப்ப முயன்றுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. பிறகுதான், ஒலேஸ்யாவின் ஐபோன் தண்ணீருக்குள் கிடப்பதையும், அது சார்ஜருடன் இணைக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் கவனித்துள்ளார் டாரியா.

ஒலேஸ்யா தனது ஐபோன் சார்ஜ் ஆகும்போதே, குளித்துக்கொண்டே அதை பயன்படுத்தியுள்ளார். மொபைல் தண்ணீரில் விழுந்ததால் மின்சாரம் தாக்கி அவர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆகவே, குளிக்கும்போது மொபைல் பயன்படுத்துவது குறித்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!