சாப்பிட்டது தான் மிச்சம்… பிக்பாஸ் கேள்வியால் திணறும் போட்டியாளர்கள்


கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கேட்ட கேள்விக்கு திணறுகிறார்கள்.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று ரசிகர்களுக்கு கூறுமாறு பிக்பாஸ் கூறுகிறார்.

அதற்கு ஷிவானி,கேபி, ஆஜீத், சோம் ஆகியோர் என்ன கூறுவது என்று திணறுகின்றனர். ரம்யாவிடம் இந்த வாய்ப்பு மறுபடியும் வராது ரம்யா என்றும், இந்த மாதிரி பேசுறதுக்கு வேற வாய்ப்பு கிடைக்குமா என்று சோமிடமும், 60 நாட்கள் எதுவே ஞாபகம் வரவில்லையா என்று சோமிடமும் பிக்பாஸ் கேட்கிறார்.

அனிதா நான் அனைவருக்கும் ஹெயர் ஸ்டைல் செய்து கொடுத்ததாக கூறுகிறார். மொத்தத்தில் வீட்டுக்குள் சண்டைய மட்டும் நடத்திற்று இருக்காங்க, சொல்ற அளவுக்கு எதுவும் யாரும் பண்ணவில்லை என்று திணறுவதாக வீடியோவை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!