எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் இன்று – முதலமைச்சர்-துணை முதலமைச்சர் மரியாதை..!


அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படங்களை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர். அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்

இந்நிலையில், எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் அனைத்து பகுதிகளிலும் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அந்தந்த பகுதி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!