காணாமல் போன 2 திருநங்கைகள்… கிணற்றில் வீசப்பட்ட மூட்டையில் உடல்கள்..!


நெல்லையில் இரண்டு திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே கிணற்றில் இருந்து 3 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். உடல்கள் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. அவர்களில் 2 பேர் காணாமல் போன திருநங்கைகள் என்பது தெரிய வந்துள்ளது.

முன்விரோதத்தினால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!