சிறுநீரை குடிக்க கட்டாயப்படுத்தி அராஜகம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட இளைஞர்!


இவர்கள் எல்லாம் பெண்களா என்று கேட்க அதிர்ச்சியுடன் கேட்க தோன்றுகிறது.. குழாயில் தண்ணீர் பிடிக்க போன இளைஞரை, அங்கிருந்த பெண்கள் 3 பேரும் சேர்ந்து, இளைஞரை சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர… இதனால் அந்த இளைஞர் மனம் உடைந்து, அவமானத்தில் தற்கொலையே செய்து கொண்டார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மபி மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சஜோர் என்ற கிராமம் உள்ளது.. போபாலில் இருந்து 300கிமீ தொலைவில் உள்ளது இந்த கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் விகாஸ் ஷர்மா.. 19 வயது இளைஞர் இவர்.

கோயிலுக்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக தெருவில் உள்ள கைப்பம்பு இருக்கும் இடத்திற்கு இவர், சென்றிருக்கிறார்.. கையில் கொண்டு போன குடத்தை பம்ப் அடியில் வைத்துவிட்டு, குழாயில் தண்ணீர் அடித்து கொண்டிருந்தார்.

அந்த சமயம், மனோஜ் கோலி என்பவர் தனது சகோதரிகள் தரவாதி கோலி, பிரியங்கா கோலியுடன் அங்கு தண்ணீர் பிடிக்க நின்று கொண்டிருந்தார்.. அப்போது மனோஜ் கோலியின் குடத்தில் தண்ணீர் பட்டுவிட்டதாக தெரிகிறது… இதனால் மனோஜ் கோலி தனது சகோதரிகளுடன் சேர்ந்து விகாஸின் தலைமுடியை தரதரவென இழுத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விகாஸ் ஷர்மா வைத்திருந்த குடத்தில் மனோஜ் கோலி சிறுநீர் கழித்திருக்கிறார்.. அதை சகோதரிகள் 3 பேரும் சேர்ந்து குடிக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த விகாஸ் ஷர்மா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு இந்த சம்பவம் குறித்து விலாவரியாக கண்ணீர் சிந்தி ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார்.

மேலும் செல்போனிலும் தன் இறப்பு குறித்து ரிக்கார்ட் செய்து ஒரு வீடியோவை வைத்திருந்தார்.. இந்த வீடியோ, கடிதத்தின் அடிப்படையில் போலீசார் அந்த 3 பேரின் மீதும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல், தற்கொலைக்கு உடந்தை ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!