கொரோனா வைரசுக்கு இத்தனை டாக்டர்கள் பலியா..? அதிர வைத்த இத்தாலி..!


இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 100 டாக்டர்கள் பலியானதாக அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசுக்கு அதிகம்பேர் பலியான நாடாக இத்தாலி திகழ்கிறது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலாக, அங்கு கொரோனாவுக்கு இதுவரை 100 டாக்டர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலையில் சேர்ந்த ஓய்வுபெற்ற டாக்டர்களும் அடங்குவர்.

இதை அந்நாட்டு சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோல், 30 நர்சுகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம்பேர், மருத்துவ துறையில் பணியாற்றுபவர்கள் என்ற தகவலை மற்றொரு அமைப்பு வெளியிட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!