தந்தை-மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை… நெஞ்சை உருக்கிய காரணம்..!


கடலூர் அருகே வரதட்சணை கொடுமையால் தந்தை-மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை அடுத்த கண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி (வயது 58), பாத்திரம் தயாரிக்கும் தொழிலாளி.

இவரது மகள் சங்கீதா (28). இவருக்கும் புதுவை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங்களில் ராஜேஷ், அவரது மனைவி சங்கீதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த பிரச்சினை காரணமாக சங்கீதா அவரது கணவரை விட்டு பிரிந்து கடலூர் கண்ணார பேட்டையில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ராஜேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கு அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்த தகவல் சங்கீதாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பாவாடைசாமி மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகிய 2 பேரும் இன்று வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களை பாவாடைசாமியின் மகன்கள் மீட்டு சிகிச்சைக்காக கண்ணாரம் பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாவாடைசாமியும், சங்கீதாவும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார்செய்யப்பட்டது. அதன்பேரில் பாவாடைசாமியும், சங்கீதாவும் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!