கோர விபத்தில் சிக்கிய உக்ரைன் விமானம்… 170 பயணிகளின் கதி என்ன ஆனது..?


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 170 பேரும் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானில் இருந்து இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கிவ் நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம் (பி.எஸ் 752) தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

கீழே விழுந்து நொறுங்கியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் மீட்புப்பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேரும் உயிரிழந்தாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!