3 குழந்தைகளின் தாய் திடீர் மாயம்.. பிறகு செல்போன் ஸ்விட்ச் ஆஃப்! கதறும் கணவன்!


ராயக்கோட்டை அருகே 3 குழந்தைகளின் தாய் திடீரென மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கன அள்ளியை அடுத்த பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி லட்சுமி (வயது29). இவர்களுக்கு மதுமிதா, லலிதா என்ற 2 மகள்களும், மோகன் என்ற மகனும் உள்ளனர்.

லட்சுமி நேற்று காலை தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். மாலை 3 மணியளவில் லட்சுமியை அவரது கணவர் கோபால் செல்போனில் தொடர்பு கொண்டபோது ராயக்கோட்டை அருகே பஸ்சில் வருவதாக தெரிவித்தார். ஆனால் அவர் நீண்டநேரமாகியும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை.

கோபால் மீண்டும் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது லட்சுமியின் செல்போன் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் பதறிப்போன கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் லட்சுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் தேடியும் கிடைக்காததால் அவர் மாயமானது தெரியவந்தது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!