கீர்த்தி சுரேஷால் ரஜினியை வாழ்த்தும் நெட்டிசன்ஸ்…!


சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக கீர்த்தி மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அந்த படத்திற்கு கொடுத்த அதே டேட்ஸில் தான் தலைவர் 168 படத்தில் நடிக்க வேண்டியுள்ளது. ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட கீர்த்தி சுரேஷ் விரும்பவில்லை. இதையடுத்து அவர் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி குந்தவையாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. அய்யோ கீர்த்தியை போய் குந்தவையாக நடிக்க வைக்கிறாரே இந்த மணி, அவருக்கு என்னாச்சு என்று கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ரசித்து, ரசித்து படித்தவர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் கீர்த்தியே பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகியுள்ளது பலருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. நல்ல வேளை கீர்த்தி குந்தவையாக நடிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் நல்லா இருக்கணும், அவருடன் சேர்ந்து நடிக்கும் ஆசையில் தான் கீர்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதற்கிடையே பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கிவிட்டது. கார்த்தி மற்றும் ஜெயம் ரவி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். விக்ரம் விரைவில் கலந்து கொள்கிறார். தாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்குமாம்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!